For Daily Alerts
Just In
ஜம்மு காஷ்மீரில் இன்று காலையும் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்!
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியை தொடர்ந்தும் பதற்றப் பகுதியாக வைத்திருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கருதுகிறது. இதனாலேயே எல்லையில் இந்திய ராணுவத்தினரை ஆத்திரமூட்டும் வகையில் தொடர் தாக்குதல்களை அந்நாடு நடத்தி வருகிறது.
கடந்த 4 நாட்களில் 8 முறை யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் மேற்கொண்டு வருகிறது பாகிஸ்தான். இன்று காலை சம்பா செக்டாரில் நாராயண்பூர் என்ற இடத்தில் உள்ள இந்திய நிலைகளை இலக்கு வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியத் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
இருதரப்புக்கும் இடையே சுமார் 15 நிமிட நேரம் கடும் துப்பாக்கிச் சண்டனை நடைபெற்றது.
Comments
English summary
Pakistan troops opened fire at Narayanpur post in Samba sector,J&K around 8:00 am this morning.
Story first published: Tuesday, August 13, 2013, 9:45 [IST]