For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்மு காஷ்மீரில் இன்று காலையும் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்!

By Mathi
Google Oneindia Tamil News

Fresh ceasefire violation by Pakistan.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நாள்தோறும் தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். இன்று காலை 8 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது.

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியை தொடர்ந்தும் பதற்றப் பகுதியாக வைத்திருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கருதுகிறது. இதனாலேயே எல்லையில் இந்திய ராணுவத்தினரை ஆத்திரமூட்டும் வகையில் தொடர் தாக்குதல்களை அந்நாடு நடத்தி வருகிறது.

கடந்த 4 நாட்களில் 8 முறை யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் மேற்கொண்டு வருகிறது பாகிஸ்தான். இன்று காலை சம்பா செக்டாரில் நாராயண்பூர் என்ற இடத்தில் உள்ள இந்திய நிலைகளை இலக்கு வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியத் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.

இருதரப்புக்கும் இடையே சுமார் 15 நிமிட நேரம் கடும் துப்பாக்கிச் சண்டனை நடைபெற்றது.

English summary
Pakistan troops opened fire at Narayanpur post in Samba sector,J&K around 8:00 am this morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X