For Daily Alerts
Just In
மாட்டுத் தீவன ஊழல் வழக்கு நீதிபதியை மாற்றக் கோரிய லாலு மனு தள்ளுபடி!
பீகார் மாநிலத்தில் லாலு முதல்வராக இருந்த மாட்டுத் தீவன கொள்முதலில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் தம் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிபதி, ஆளும் ஐக்கிய ஜனதா தள அமைச்சர்கள் சிலரது உறவினர் என்பதால் தமக்கு நீதி கிடைக்காது என்றும் இதனால் இந்த விசாரணையை வேறு நீதிபதியிடம் மாற்ற வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் லாலு பிரசாத் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று நிராகரித்த உச்சநீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை எவ்வளவு விரைவாக அளிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக வழங்க வேண்டும் என்றும் விசாரணை நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டார்.
Comments
English summary
SC rejects RJD chief Lalu Prasad's plea for transfer of trial court judge hearing the case against him in fodder scam.
Story first published: Tuesday, August 13, 2013, 11:51 [IST]