மாட்டுத் தீவன ஊழல் வழக்கு நீதிபதியை மாற்றக் கோரிய லாலு மனு தள்ளுபடி!

Subscribe to Oneindia Tamil

SC rejects Lalu's plea for transfer of trial court judge hearing
டெல்லி: தம் மீதான மாட்டுத் தீவன ஊழல் வழக்கு நீதிபதியை கோரி உச்சநீதிமன்றத்தில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

பீகார் மாநிலத்தில் லாலு முதல்வராக இருந்த மாட்டுத் தீவன கொள்முதலில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் தம் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிபதி, ஆளும் ஐக்கிய ஜனதா தள அமைச்சர்கள் சிலரது உறவினர் என்பதால் தமக்கு நீதி கிடைக்காது என்றும் இதனால் இந்த விசாரணையை வேறு நீதிபதியிடம் மாற்ற வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் லாலு பிரசாத் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று நிராகரித்த உச்சநீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை எவ்வளவு விரைவாக அளிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக வழங்க வேண்டும் என்றும் விசாரணை நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+