கன்னத்தில் ஓங்கி அறைந்த ஆசிரியர்: பாதி செவிடான பிளஸ் 2 மாணவன்
டெல்லி: டெல்லியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவனை ஆசிரியர் அறைந்ததால் அவருக்கு காது சரியாக கேட்காமல் போனது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் நிதின் குமார்(19). அவர் மத்திய டெல்லியில் உள்ள மேற்கு பட்டேல் நகரில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார். அவர் கடந்த 3ம் தேதி அரசியல் அறிவியல் வகுப்பில் ஆங்கில வீட்டுப்பாடத்தை செய்து கொண்டிருந்திருக்கிறார்.
இதை பார்த்த ஆசிரியர் கிரண் பால் ஆத்திரம் அடைந்து நிதினை கன்னத்தில் அறைந்துள்ளார். அன்று வீட்டுக்கு சென்ற நிதின் இடது காது வலிப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது தாய் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு நிதினை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது காது சவ்வில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் நிதினுக்கு இடது காது சரியாக கேட்காமல் போனது.
இதையடுத்து அவரது பெற்றோர் ஆசிரியர் கிரண் பால் மீது போலீசில் புகார் கொடுத்தனர். இதற்கிடையே ஆசிரியர் தலைமறைவாகிவிட்டார்.












Click it and Unblock the Notifications