சோலார் மின் திட்ட ஊழல்.. நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டார் கேரள முதல்வர் உம்மன் சாண்டி!
Subscribe to Oneindia Tamil

சோலார் மின் திட்ட ஊழலில் உம்மன் சாண்டியின் அலுவலக ஊழியர்கள், நடிகர், நடிகைகள் என பலரும் சிக்கினர். இதனால் உம்மன் சாண்டி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
திருவனந்தபுரத்தில் நேற்று இடதுசாரிகள் பிரம்மாண்ட தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர். இதில் இடதுசாரி தலைவர்களுடன் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் இந்த ஊழல் தொடர்பாக நீதி விசாரணைக்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி உத்தரவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications