திருத்தணி தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ மகளின் காதல் கணவர் மாயம்: போலீசில் தாயார் புகார்
சென்னை: திருத்தணி தேமுதிக எம்.எல்.ஏ அருண் சுப்ரமணியத்தின் மகளை காதலித்து மணந்த தனது மகனை கடந்த 2 நாட்களாக காணவில்லை என்று போலீசில் புகார் தெரிவித்துள்ளார் சென்னையைத் சேர்ந்த ஒரு பெண்.
சென்னை வடபழனியில் வசித்து வரும் ராஜகுமாரி என்பவர் வடபழனி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
திருத்தணி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அருண்சுப்பிரமணியன் மகளை காதலித்து திருமணம் செய்த எனது மகன் ரமேசுக்கு, அருண் சுப்பிரமணியன் குடும்பத்தினரிடம் இருந்து மிரட்டல் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் எனது மகன் ரமேசை 2 நாட்களாக காணவில்லை. அவரை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த புகார் மனுவில் ரமேசின் தாயார் ராஜகுமாரி கூறியுள்ளார்.
அருண் சுப்பிரமணியனின் மகள் நித்யா. இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த வாலிபர் ரமேசை கடந்த சில வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு குழந்தை உள்ளது. தற்போது ரமேஷ் தனது தாயாருடன் வடபழனியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு நித்யா தனது குழந்தையுடன், திருத்தணியில் உள்ள தனது தந்தை அருண் சுப்பிரமணியனின் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் தனது கணவர் வீட்டுக்கு அவர் திரும்பவில்லையாம்.
தனது மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி திருத்தணியில் உள்ள அருண் சுப்பிரமணியன் வீட்டுக்கு ரமேஷ் கேட்டுள்ளார். ஆனால் நித்யாவை கணவருடன் அனுப்பி வைக்காமல் எம்.எல்.ஏவின் ஆட்கள் ரமேஷை மிரட்டி அனுப்பியதாக தெரிகிறது.
இது தொடர்பாக ஏற்கனவே ரமேஷின் தாயார் ராஜகுமாரி கடந்த 4-ந்தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.
அருண்சுப்ரமணியன் எம்.எல்.ஏ. வீட்டில் இருந்தவர்கள் தன் மகனை மிரட்டுவதாகவும், எனவே ரமேசுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் ரமேஷ் காணமல் போகவே கண்டுபிடித்து தருமாறு வடபழனி போலீசில் புகார் அளித்துள்ளார் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அருண் சுப்பிரமணியன் எம்.எல்.ஏ.விடமும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே அருண் சுப்ரமணியத்தின் மீது நிலமோசடி வழக்கு உள்ளது. இந்த நிலையில் புதிதாக மகளின் காதல் கணவர் மாயமான வழக்கும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
பெங்களூரில் 5 வருட காதல் கணவனை மர்ம உறுப்பிலேயே... ஓங்கி மிதித்த பெண்.. அடுத்து நடந்த ட்விஸ்ட் -
செல்போனில் வந்த மர்ம லிங்கால் 12 லட்சத்தை இழந்த எம்எல்ஏ.. பவன் கல்யாண் ஆதரவாளர் ஏமாந்தது எப்படி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications