மழையிலும் கூட குடைச்சலா? தென்சீனக் கடல் புயலால் தமிழகத்துக்கு மழை இல்லையாம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தென்சீனா கடலில் உருவாகி உள்ள புயல்தான் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மழையை கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த வாரம் இரவு நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக மழை சுத்தமாக பெய்யவில்லை.
இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மழையை தென்சீன கடலில் உருவாகியுள்ள புயல் உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்துக்கான மழை அளவு குறைந்து போயுள்ளது.

இருப்பினும் சென்னை நகரில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யக் கூடும் என்றார்.
இவ்ளோ தொலைவில் இருந்தும் குடைச்சலா?












Click it and Unblock the Notifications