டெல்லி எய்ம்ஸ் விடுதியில் தூக்கில் தொங்கிய பெண் டாக்டர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் உள்ள எய்ம்ஸ் விடுதியில் பெண் மருத்துவர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பல் மருத்துவராக பணிபுரிந்தவர் வர்னிகா பாண்டே(29). அவரது கணவர் பாராஸ் கன்னாவும் அதே மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். அவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தான் காதல் திருமணம் நடந்துள்ளது.
அவர்கள் எய்ம்ஸ் விடுதியில் அறை எண் 214ல் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் பாராஸ் அறைக்கு சென்றபோது வர்னிகா மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications