'நாளைய முதல்வனே': ஓசூரில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil

விஜய்யின் தலைவா படம் தமிழகத்தில் மட்டும் ரிலீஸாகவில்லை. இதனால் தமிழக ரசிகர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று படத்தை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூர், ஆணைக்கல், அத்திப்பள்ளி ஆகிய இடங்களில் தலைவா பட சிடிக்கள் கூவி, கூவி விற்பனை செய்யப்படுகிறது.
படத்தில் வரும் அரசியல் பஞ்ச் டயலாக்கால் தான் தலைவா படத்தை தமிழகத்தில் வெளியிட மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என்று விஜய் ரசிகர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் ஓசூரில் ஒட்டிய போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டர்களில் நாளைய முதல்வனே என்று விஜய்யை குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் குறித்த விவரங்களை உளவுத்துறை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications