67-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர்!
டெல்லி: நாட்டின் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன்சிங் இன்று காலையில் தேசியக் கொடியேற்றினார்.
நாடு முழுவதும் 67-வது சுதந்திர தினம் இன்று எழுச்சியோடு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்
பின்னர் காலை 7.30 மணி அளவில் டெல்லி செங்கோட்டைக்கு வந்த பிரதமரை பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி வரவேற்றார். இதனையடுத்து தரைப்படை, கப்பற்படை, விமானப்படை என முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றார்.
இதைத் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க பிரதமர் மன்மோகன்சிங் நாட்டின் தேசியக் கொடியான மூவர்ணக் கொடியை காலை 8.13 மணிக்கு ஏற்றி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் மீராகுமார், மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.














Click it and Unblock the Notifications