ஆந்திராவில் கனமழை: மின்னல் தாக்கி ஒரு பெண் உட்பட 5 விவசாயிகள் பலியான பரிதாபம்
Subscribe to Oneindia Tamil
ஐதராபாத்: ஆந்திராவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண் 5 விவசாயிகள் மீது மின்னல் தாக்கியது. அதில் அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்கள்.
நேற்று, ஆந்திரப்பிரதேச மாநில கம்மம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாது, ஜுலுருபாடு மண்டல் என்ற இடத்தில் உள்ள விவசாயிகள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அப்பகுதியின் வெவ்வேறு பகுதியில் மின்னல் தாக்கியது. அதில் ஒரு கணவன், மனைவி உட்பட மேலும் மூவர் பரிதாபமாக உடல் கருகி பலியானார்கள். மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்கப்படும் என கம்மம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications