மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

Subscribe to Oneindia Tamil

Mettur dam
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து குறைந்துள்ளதால் அணையில் இருந்து பாசனத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த 5 தினங்களாக வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில் பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைந்து உள்ளதால் தற்போது அணையில் இருந்து பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் அணைக்கு நீர் வரத்து தண்ணீர் திறப்பை விட குறைந்து உள்ளதால் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 497 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரத்து 600 கன அடி வீதம் திறந்து விடப்படுகிறது.மேட்டூர் அணையின் நீர் மட்டம் வியாழக்கிழமை காலை நிலவரப்படி 118.71 அடியாக இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+