இட்லி மாவு அரைக்க வந்த 7 வயது சிறுமியைக் கற்பழித்த 65வயது தாத்தா கைது
கடப்பா: கடப்பாவில், இட்லிமாவு அரைக்க வந்த 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக முதியவர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
ஆந்திராவில், கடப்பா மாவட்டம் பொதுத்தூர் நகரை சேர்ந்த புல்லையா யாதவ் (65) என்பவர் வீட்டில் இருந்த படியே அக்கம்பக்கத்தாருக்கு இட்லி மாவு அரைத்துக் கொடுக்கும் பணியைச் செய்து வருகிறார்.
சம்பவத்தன்ரு இவரது வீட்டிற்கு இட்லி மாவு அரைக்க 7 வயது சிறுமி ஒருவர் வந்துள்ளார். மிட்டாய் தருவதாக ஆசைக் காட்டி அச்சிருமியை வீட்டிர்குள் அழைத்துச் சென்ற புல்லையா, தனிமையில் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அழுது கொண்டே சென்ற சிறுமி மூலம் விபரம் அறிந்த அச்சிறுமியின் உறவினர்கள் ஆத்திரத்தில் புல்லையாவின் வீட்டை முற்றுகையிட்டனர். பின்னர் புல்லையாவை அடித்து, போலீசில் பிடித்துக் கொடுத்தனர்.
.
இதற்கு முன்னரும் இதே போல் சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக இருமுறை கைதானவர் இந்த புல்லையா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications