ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் காலவரையற்ற உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

விஜயவாடா: தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதை எதிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் விஜயம்மா இன்று முதல் தொடர் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளார்.

தெலுங்கானா தனி மாநிலத்திற்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு மூண்டுள்ளது. இதை எதிர்த்து போராட்டங்களும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் விஜயம்மா காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

தெலுங்கானா தனி மாநில முடிவுக்கு ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

கவுரவத் தலைவர் விஜயம்மா

கவுரவத் தலைவர் விஜயம்மா

அக்கட்சியின் கவுரவத் தலைவரும், ஜெகன் மோகன் ரெட்டியின் தாயாருமான விஜயம்மா இந்த முடிவை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கிறார்.

குண்டூரில்

குண்டூரில்

குண்டூரில் அவர் இன்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

விஜயவாடா திட்டம் ரத்து

விஜயவாடா திட்டம் ரத்து

முன்னதாக அவர் விஜயவாடாவில் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அங்கு இடைத் தேர்தல் நடைபெறுவதால் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் குண்டூருக்கு போராட்டத்தை மாற்றியுள்ளார்.

ஆதரவு பெருகும்

ஆதரவு பெருகும்

விஜயம்மாவின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு மேலும் கூடும் என்ற எதிர்பார்ப்பில் அக்கட்சியினர் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+