அறுவை சிகிச்சையின்போது பெண்ணின் வயிற்றுக்குள் 3 கையுறைகளை வைத்து தைத்த அரசு மருத்துவர்கள்

அரியலூர் மாவட்டம் வி. கைகாட்டியை அடுத்து உள்ளது குடிசல். இந்த கிராமத்தைச் சேர்ந்த குமார் ஆலந்துரையார் கட்டளையைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகள் சுமதியை ஒரு ஆண்டுக்கு முன்பு மணந்தார். கர்ப்பிணியான சுமதி பிரசவத்திற்காக தனது தாய் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த அவருக்கு கடந்த ஜுலை மாதம் 24ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரை சுண்டக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கிருந்த மருத்துவர்கள் சுமதியை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சுமதிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதில் இருந்தே சுமதியால் சரியாக சாப்பிட முடியவில்லை, மலம் கழிக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மலம் கழிக்கையில் கையுறை வெளியே தெரிந்துள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே சுண்டக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று விவரத்தை தெரிவித்தார். அவரை பரிசோதித்தபோது அரியலூர் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்கையில் 3 கையுறைகளை அவரின் வயிற்றுக்குள் வைத்து தைத்தது தெரிய வந்தது. இதையடுத்து சுகாதார நிலைய மருத்துவர்கள் அந்த 3 கையுறைகளை வெளியே எடுத்துவிட்டு சுமதிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications