இருகிராமத்தினர் இடையே மோதல்: 700 வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு
சங்கரன்கோவில்: நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே இருகிராமத்தினர் இடையே ஏற்பட்டு வரும் தொடர் மோதலால் வாழைத் தோப்பில் இருந்த 700 வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சங்கரன் கோவிலை அடுத்த களப்பாகுளத்தில் கடந்த 16ஆம் தேதி அரசு பஸ் படிக்கட்டில் இருந்து பெருங்கோட்டூரை சேர்ந்த மாணவர்கள் கீழே இறங்க மறுத்ததால் இரண்டு கிராம மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில், பெருங்கோட்டூரை சேர்ந்த 24 மாணவர்கள் காயமடைந்தனர்.
இதேபோல் பெருங்கோட்டூர் வழியாக வந்த அரசு பஸ்சை நிறுத்தி களப்பாகுளத்தை சேர்ந்த விஜயகுமார் (27) என்பவரை அந்த கிராம மக்கள் தாக்கினர். இந்த சம்பவத்தை கண்டித்து இரண்டு கிராம மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மோதல் தொடர்பாக இரண்டு கிராமத்தைச் சேர்ந்த 291 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், களப்பாகுளத்தைச் சேர்ந்த அருள்ராஜ் (30) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவனும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பதற்றம் நிலவியதால் இரு கிராமத்திலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், பெருங்கோட்டூர் கிராமத்தில் உள்ள தோட்டங்களில் சனிக்கிழமை நள்ளிரவில் புகுந்த மர்ம கும்பல் 700 வாழை மரங்களை வெட்டி சாய்த்தது. மேலும், பெருங்கோட்டூர் பஞ்சாயத்து துணைத் தலைவர் கோட்டூர்சாமிக்கு சொந்தமான 67 அகத்தி மரங்களும் வெட்டப்பட்டன. ஞாயிறன்று அதிகாலையில் தோட்டத்திற்குப் போய் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தோட்ட உரிமையாளர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் பாதுகாப்பையும் மீறி வாழைகள் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications