நீரா ராடியா டேப் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்த ரத்தன் டாடா
டெல்லி: நீரா ராடியாவிடம் தான் தொலைபேசியில் பேசியதை லீக் செய்தது தொடர்பான வழக்கு விசாரணையை பார்க்க டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உச்ச நீதிமன்றத்திற்கு வந்தார்.
2ஜி ஊழல் விவகாரத்தில் பெரிதாக பேசப்பட்ட கார்பரேட் லாபியிஸ்டான நீரா ராடியா குறித்து கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு சில புகார்கள் சென்றதால் அவரது தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட்டன. 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி முதல் 60 நாட்களும், பின்னர் அக்டோபர் 19ம் முதல் மீண்டும் 60 நாட்களும் என மொத்தம் 180 நாட்கள் அவரின் தொலைபேசி அழைப்புகள் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் மீண்டும் 2009ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி முதல் 2 மாதங்களுக்கு ரராடியாவின் தொலைபேசி அழைப்புகள் பதிவு செய்யப்பட்டன. அப்படி பதிவான டேப்புகளில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா பேசியதும் பதிவானது. அந்த விவரங்கள் கடந்த 2010ம் ஆண்டு சில பத்திரிக்கைகள் மற்றும் இணையதளங்களில் வெளியாகின.

இதையடுத்து டேப் விவகாரங்கள் லீக்கானது குறித்து அரசு சமர்பித்த அறிக்கையின் நகல் கேட்டு டாடா உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை பார்க்க அவர் இன்று உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications