குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சென்டிரல் ரயில் நிலையத்துக்கு ரூ. 1 லட்சம் பரிசு!
சென்னை: சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் குழந்தைகளுக்கு மிகுந்த பாதுகாப்பு நிலவுகிறது. குழந்தை திருட்டு இங்கு அறவே இல்லை என்று பாராட்டு தெரிவித்துள்ள மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஸ்ரீகோட்லா ஜெயசூரியபிரகாஷ் ரெட்டி, இதற்காக ரயில்வே சார்பில் ரூ 1லட்சம் தொகையை பரிசாக அளிப்பதாக கூறியுள்ளார்.
ஜெயப்பிரகாஷ் ரெட்டி நேற்று சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சென்டிரல் ரயில் நிலையப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்துப் பாராட்டினார். அப்போது அவர் கூறியதாவது..

81 சங்கிலிப் பறிப்பு
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் 81 சங்கிலிப் பறிப்புச் சம்பவங்களி்ல் துப்பு துலக்கப்பட்டுள்ளது.

குழந்தை திருட்டே இல்லை
இந்த ரயில் நிலையத்தில் குழந்தைத் திருட்டு என்பதே இல்லை. இது பாராட்டுக்குரியது.

இந்தா பிடி ரூ. 1லட்சம்
இதற்காக ரயில்வே சார்பி்ல சென்டிரல் ரயில் நிலையத்துக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.

நல்லா பராமரிக்கிறாங்களே..
ரயில் நிலையத்தை நன்றாகப் பராமரிக்கிறார்கள். அது பாராட்டுக்குரியது.

லெவல் கிராசிங்குகள் நீக்கப்படும்
சென்னை நகருக்குள் மட்டும் 35 இடங்களில் லெவல் கிராசிங் உள்ளன. 6 அல்லது 7 ஆண்டுகளுக்குள் இவை அனைத்தும் சுரங்க பாதைகள் அல்லது மேம்பாலங்களாக மாற்றப்படும்.

தாம்பரத்தில் 3வது முனையம்
சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ஆகிய சந்திப்புகளுடன் தாம்பரத்தில் புதிய முனையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர்.

தென் மாவட்ட ரயில்கள் தாம்பரத்தோடு
தாம்பரம் முனையம் வந்ததும் தென் மாவட்ட ரயில்கள் அனைத்தும் இங்கேயே நின்று புறப்பட ஏற்பாடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிர்ப்பு நிலவி வரும் போதிலும் ரயில்வே நிர்வாகம் இந்தத் திட்டத்தை தொடர்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications