காவிரியில் மேலும் 3 அணைகள் கட்ட கர்நாடக அரசு முயற்சி- தமிழக விவசாயிகள் எதிர்ப்பு!
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: காவிரி ஆற்றின் குறுக்கே மேலும் 3 புதிய அணைகளை கட்ட கர்நாடகா ஆலோசித்து வருவதற்கு தமிழக டெல்டா விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
காவிரியின் குறுக்கே நீர்மின் நிலையம் அமைப்பதற்காக 3 அணைகளை கட்ட ஆலோசித்து வருவதாக கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா பெங்களூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். மேலும் இந்த அணைகளில் 50 டி.எம்.சி. வரை தண்ணீர் சேமித்து வைக்க முடியும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதனால் கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் தமிழகத்துக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கர்நாடக அரசின் புதிய அணைகள் கட்டும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் வகையில், தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications