விசாகப்பட்டினம் ஹெச்பிசிஎல் சுத்தகரிப்பு ஆலையில் பயங்கர தீ - ஒருவர் பலி
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் பலியாகி இருக்கிறார். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் வெல்டிங் பணியில் தனியார் நிறுவன பணியாளர்கள் ஈடுபட்டிருந்த போது கூலிங் செய்யும் பகுதியில் திடீரென தீ பிடித்தது. இந்த தீ மளமளவென பரவியது.
முதலில் இந்த தீ விபத்தில் 10 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின. தற்போதைய தகவல்களின் படி ஒருவர் பலியாகி இருப்பதாகவும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது தீ அணைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.