பாக்.சிறையில் வாடும் 365 மீனவர்கள் சனிக்கிழமை விடுதலை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் இருக்கும் 365 இந்தியர்கள் சனிக்கிழமையன்று (24ம் தேதி) விடுதலை செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கராச்சி மிலிர் மாவட்ட சிறையில் இருந்து 340 மீனவர்களும், பலூசிஸ்தான் கட்டானி சிறையில் இருந்து 25 படகுப்பணியாளர்களும் நாளை விடுவிக்கப்படுவார்கள்.
இவர்கள் அனைவரின் தண்டனைக்காலம் முடிவடைந்து விட்டதால், இந்தியாவுடனான ஒப்பந்தப்படி வரும் ஞாயிறன்று வாக எல்லை வழியாக இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.
இரு நாட்டு உள்துறை, வெளியுறவு துறை மற்றும் எல்லை மாநில பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் இவர்கள் 365 பேரும் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்திவரும் நிலையில் அங்கு பதட்டம் நீடித்து வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் வாக எல்லை வழியாக அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.