3 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்த பள்ளி வேன் டிரைவர்
லக்னௌ: உத்தரபிரதேச மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில் 3 வயது பள்ளிக்குழந்தையை வேன் டிரைவர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் லக்னௌவில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த நகரத்தில் உள்ள தர்ஹா செரீப் பகுதியில் இருந்து நர்சரி பள்ளிக்கு செல்லும் மூன்று வயது குழந்தையை தினசரி அனில்குமார் பெரியா என்ற 19 வயது டிரைவர் பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம்.
சம்பவத்தன்று பள்ளியில் இருந்து அழைத்து வந்து வீட்டில் விடாமல் குழந்தை பலாத்காரம் செய்துள்ளான் அந்த டிரைவர். நடந்த சம்பவத்தை அழுது கொண்டே குழந்தை வீட்டில் தெரிவித்ததை அடுத்து டிரைவர் மீது பெற்றோர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்து வேனை பறிமுதல் செய்தனர். குழந்தைக்கு மருத்துவபரிசோதனை செய்து பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications