பலாத்காரத்திற்குப் பின்னர் அந்த இடத்தை சுத்தம் செய்யப் பணித்த குற்றவாளிகள்!
டெல்லி: மும்பையில் பெண் புகைப்பட பத்திரிக்கையாளரை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த 5 குற்றவாளிகளும், சம்பவத்திற்குப் பின்னர் அந்தப் பெண்ணையே அந்த இடத்தை சுத்தம் செய்யுமாறு கூறியுள்ளனர். மேலும் அவரை தங்களது செல்போன் வீடியோவில் படம் எடுத்து வைத்துக் கொண்டு வெளியில் சொன்னால் நெட்டில் போட்டு விடுவோம் என்றும் மிரட்டிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பலாத்காரத்திற்குப் பின்னர் கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்த அட்டூழியத்தையும் செய்துள்ளனர் இந்த ஐவரும். மேலும் அங்கிருந்து கிளம்பிப் போகும்போது அப்பெண்ணுடன் வந்திருந்த சக ஆண் பத்திரிக்கையாளரின் கைகளைக் கட்டியிருந்த கட்டையும் அவிழ்த்து விட்டுப் போயுள்ளனர்.

மும்பை போலீஸார் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் இந்த சம்பவங்களைத் தெரிவித்துள்ளனர்.
பலாத்கார சம்பவத்திற்குப் பின்னர் ஐந்து குற்றவாளிகளும் போன பின்னர் அந்தப் பெண் துரிதமாக செயல்பட்டு தனது ஆண் சக பத்திரிக்கையாளருடன் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். இதன் மூலம் பல முக்கிய ஆதாரங்கள் வீணாகி விடாமல் அவர் காத்துள்ளார். இதை டாக்டர்களும், காவல்துறையினரும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications