For Daily Alerts
Just In
பாட்டுப் பாடியபடி தூத்துக்குடியில் மேடைப் பாடகர்கள் உண்ணாவிரதம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மேடை மெல்லிசைக்கலைஞர்கள் இசைக்கச்சேரியுடன் கூடிய உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர்.
தகுதிவாய்ந்த மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கவேண்டும், இலவச பேருந்து பயண அட்டை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட மேடை மெல்லிசை கலைஞர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி விவிடி சிக்னல் பகுதியில் நடந்த உண்ணாவிரதப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சீலன் தலைமை வகித்தார். செயலாளர் ஜஸ்டின், பொருளாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உண்ணாவிரதப்போராட்டத்தில் பங்கேற்ற மேடை மெல்லிசைக்கலைஞர்கள் பாடல்களை பாடியபடி இசைக்கச்சேரியும் நடத்தினர். இசைச்கச்சேரியுடன் கூடிய உண்ணாவிரதப்போராட்டத்தினை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து வியந்து சென்றனர்.
English summary
Stage artistes were on fast in Tuticorin urging their demands.