இடைத்தேர்தலில் ஜெயிக்கலையே.. தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் குமாரசாமி!

Subscribe to Oneindia Tamil

Kumaraswamy offered to quit the JD(S) leader post
பெங்களூர்: மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கோட்டைகளை இடைத்தேர்தலில் கோட்டை விட்டதால் அக் கட்சித் தலைவர் குமாரசாமி தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் ஊரகம் மற்றும் மாண்டியா லோக்சபா தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 21-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் கடந்த சனிக்கிழமை எண்ணப்பட்டன. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கோட்டைகளாக கருதப்படும் மாண்டியா, பெங்களூர் ஊரக தொகுதிகளில் காங்கிரஸ் அதிரடியாக வெற்றி பெற்றுவிட்டது.

அதுவும் பெங்களூர் ஊரகப் பகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரான குமாரசாமியின் மனைவி அனிதா படுதோல்வி அடைந்தார். இதற்குக் காரணம் உட்கட்சி மோதல்கள்தான் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தேவ கவுடாவுக்கு குமாரசாமி கடிதம் அனுப்பியிருந்தார். இந்த ராஜினாமா கடிதத்தை ஏற்பதாகவும் தேவ கவுடா தெரிவித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+