ரூபாய் மதிப்பு சரிவா..கொஞ்சம் பொறுங்க.. முதலீடு வரத் தொடங்கியிருச்சு..: சொல்வது ப.சிதம்பரம்!
டெல்லி: ரூபாய் மதிப்பு சரிவு தொடர்பாக பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் தடைபட்டிருந்த முதலீடுகள் வரத் தொடங்கியிருக்கின்றன என்றும் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், எரிசக்தித் துறையில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து திட்டங்களையும் விரைவாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதார சரிவை நிலையை மிகவும் கவனத்துடன் உரிய நடவடிக்கையாலும் சரி செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
18 மின் திட்டங்களை துவங்க ரூ.83,772 கோடி அனுமதி அளித்து மத்திய முதலீட்டுக்கான ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஒரே நாளில் நேற்று மட்டும் ரூ.1,83,0000 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு மத்திய முதலீட்டுக்கான ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. நாட்டின் 9 உள்கட்டமைப்பு திட்டங்களும் இதில் அடங்கும்.
இந்த 9 திட்டங்களுக்கான மொத்த முதலீடு ரூ.92,514 கோடி என்றார்.