For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோனியா காந்தியை ஆம்புலன்சில் கொண்டு சென்றிருக்க வேண்டும்: நரேந்திர மோடி!

By Mathi
Google Oneindia Tamil News

Sonia Gandhi should have been taken in an ambulance: Modi
டெல்லி: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது குறித்து கவலை தெரிவித்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அவரை முழு மருத்துவ வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உணவு பாதுகாப்பு மசோதா மீதான விவாதத்தின் போது சோனியா காந்திக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற பின்பு வீட்டுக்கு திரும்பினார் சோனியா.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் குஜராத் முதல்வர் மோடி, சோனியாஜியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரை நவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸில் அழைத்து சென்றிருக்க வேண்டும். மருத்துவர்களே சிறந்த நீதிபதிகள். சோனியா உடல்நிலை பாதிக்கப்பட்ட போது அடிப்படை மருத்துவ முதலுதவிகள் பயன்படுத்தாதது கவலைக்குரியது. வீல்சேர் அல்லது ஸ்ட்ரெச்சரை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தியிருக்கலாம்.

சோனியா காந்தி பூரண குணமடைய வாழ்த்துகிறேன். அவர் உடல்நலம் குணமடைந்துவிட்டார் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

English summary
Gujarat Chief Minister Narendra Modi on Tuesday expressed concern over Sonia Gandhi's health, and said the UPA chairperson should have been taken to hospital in a well-equipped ambulance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X