ரூ.34,500-ஐ தொட்டுவிட்டு ரூ.35,000த்தை நோக்கிச் செல்லும் தங்கம் விலை
மும்பை: உள்ளூர் தங்க சந்தையில் பத்து கிராம் தங்கத்தின் விலை ரூ.34,500 ஆக அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. இந்நிலையில் மக்கள் தங்கம் வாங்குவதை தடுக்கும் வகையில் அரசு தங்க இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இது தவிர நகை ஏற்றுமதிக்கும் உரிய பணம் செலுத்தியதற்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிடப்போவதாக அமைச்சக அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.

தங்க சந்தை
உள்ளூர் தங்க சந்தையில் இன்று பத்து கிராம் தங்கத்தின் விலை ரூ.34,500 ஆக உள்ளது. இந்த வாரத்தில் தங்கத்தின் விலை ரூ.35,000த்தை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி
வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.56,000 ஆக அதிகரித்துள்ளது. இந்த வாரத்திற்குள் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.58,000த்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் கிடைக்காதோ
தங்க இறக்குமதி மீதான வரியை அரசு உயர்த்திய பிறகு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்படவில்லை. இதனால் தங்கம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் மக்கள் இருப்பதால் அதன் விலை அதிகரிக்கிறது.

ரூபாயின் கடும் வீழ்ச்சி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்து வருவதும் உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை உயர காரணமாக உள்ளது.












Click it and Unblock the Notifications