தமிழக அமைச்சரவை மாற்றம்.. கிளப்பிவிடுவது அதிமுக நிர்வாகிகளே.. ஜெ. அதிர்ச்சி!!

தமிழகத்தில் 8 அமைச்சர்கள், 21 மாவட்டச் செயலர்கள் மாற்றப்பட இருக்கின்றனர்.. லோக்சபா தேர்தலை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப் போகிறார். குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் பதவிக்கு ஆப்பு வைக்கப்படுகிறது என்றெல்லாம் தகவல்கள் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருந்தன.
எப்போதும் போலவே அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீது போயஸ் தோட்டத்துக்கு புகார் மழை சென்று கொண்டிருக்கும் நிலையில் அடிக்கடி எழும் அமைச்சரவை மாற்ற செய்திக்கான மூலத்தைக் கண்டறிய அதிமுக தலைமையும் உத்தரவிட்டிருந்ததாம்.
அதிமுக தலைமையின் உத்தரவுப்படி நடத்தப்பட்ட விசாரணையில் சில மூத்த அதிமுக நிர்வாகிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களாகவே அமைச்சரவை மாற்றம், மாவட்ட செயலர் மாற்றம் போன்ற செய்திகளைக் கிளப்பிவிட்டு வேடிக்கை பார்ப்பதாக தெரியவந்திருக்கிறது. இந்தத் தகவல் ஜெயலலிதாவுக்கும் தெரிவிக்கப்பட அவர் அதிர்ச்சியடைந்து போனாராம்.
இதனால்தான் அமைச்சரவை மாற்றத்தை தள்ளிவைத்துவிட்டு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அதிரடி மாற்றத்தை அரங்கேற்றலாம் எனக் காத்த்ருக்கிறாராம் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications