மும்பை பலாத்கார பெண் போட்டோகிராபர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
மும்பை: மும்பையில் 5 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் போட்டோகிராபர் நேற்றிரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 22-ம் தேதி தெற்கு மும்பை, சக்தி மில் பழமையான கட்டடத்தில், ஆங்கிலப் பத்திரிகையின்பெண் போட்டோகிராபர், 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பலத்த உள்காயங்களுடன் மும்பை ஜஸ்லோக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் போட்டோகிராபர், குணமடைந்து விட்டதாக நேற்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனையடுத்து நேற்றிரவு அவர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண் போட்டோகிராபர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் போது முகத்தை எதுவும் மூடவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சம்பவம் நடப்பதற்கு முன்பாக, பாழடைந்த கட்டடத்தினை, தான் எடுத்த இரண்டு போட்டோக்கள் கேமிராவில் பதிவாகியுள்ளதாகவும், அதே இடத்தில் தனது செல்போனும் காணாமல் போனதாக அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரையும், சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் புதன்கிழமை விசாரணை நடத்தினர்.அங்கு, குற்றம் நடந்த முறையை போலீஸார் முன் அவர்கள் நடித்துக் காட்டினர். அதை போலீஸார் விடியோவில் பதிவுசெய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்ட விவரங்களும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் நடித்துக் காட்டிய மீள் நிகழ்ச்சிகளும் ஒத்துப்போகின்றனவா? என்று போலீஸார் ஒப்பிட்டு பார்த்தனர்.
ஆதாரங்கள் சேகரிப்பு
இந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக, மிகவும் உறுதியான ஆதாரங்களை சேகரித்து வரும் போலீஸார், இந்த மீள் நிகழ்ச்சியின் விடியோ பதிவை முக்கிய ஆதாரமாக கருதுகின்றனர்.
குஜராத்தில் இருந்து வந்திருந்த மனநல மருத்துவர்கள் இருவர், கைதாகியுள்ள 5 நபர்களிடமும், குரலமைப்பு பகுப்பாய்வு சோதனையை மேற்கொண்டனர். தவிர 5 பேரின் வீடுகளிலும் போலீஸார் சோதனை நடத்தி உள்ளாடைகள் உள்ளிட்ட துணிகளை கைப்பற்றினர்.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து இன்னும் நிறைய ஆதாரங்கள் சேகரிக்கப்பட வேண்டியுள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
இதனிடையே இந்த வழக்கின் விசாரணையில் ரகசியம் காக்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில முதல்வர் பிரிதிவிராஜ் சவாண் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications