அரெஸ்டாகிறார் அசாராம் பாபு? ஆசிரமத்திற்குள் போலீஸ் நுழைந்தது! உதவியாளர் சரண்!!
ஜோத்பூர்: பாலியல் புகாரில் சிக்கிய அஸ்ரம் பாபுவின் இந்தூர் ஆசிரமத்திற்குள் போலீசார் நுழைந்தபோது சாமியாரின் உதவியாளர் போலீசில் சரணடைந்தார். அஸ்ரம் பாபுவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பதால அவர் குணமடைந்தவுடன் போலீசின் விசாரணைக்கு வருவார் என்று அசாராம் மகன் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த சாமியார் அஸ்ரம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிரமம் மற்றும் அறக்கட்டளை அலுவலகங்கள் இருக்கின்றன.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் 'அஸ்ரம் பாபு என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்' என அவருடைய ஆசிரமத்தில் தங்கியிருந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவர் டெல்லி போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, ஜோத்பூர் போலீசார் நேரில் ஆஜராகும்படி அஸ்ரம் பாபுவுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.
ஆஜர் ஆவதற்கு கடைசி நாளான நேற்று அஸ்ரம் பாபு போலீசில் ஆஜராகவில்லை. ஆனால் அஸ்ரம் பாபு சார்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம் அஸ்ரம் பாபுவை கைது செய்வதில் காவல்துறை மெத்தனம் காட்டுவதாக குற்றம் சாட்டு எழுந்தது. ஆனால் அவர் எங்கிருக்கிறார் என தங்களுக்கு தெரியவில்லை என்றும், அவரை பிடிக்க பல இடங்களுக்கு தனிப்படைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் அஸ்ரம் பாபு, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஆசிரமத்திற்குள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அவரை கைது செய்வதற்காக போலீஸ் படை ஒன்று உள்ளே புகுந்தது அவரை உள்ளே வைத்துக்கொண்டே அவரது ஆதரவாளர்கள் போலீசாருக்கு போக்கு காட்டிக்கொண்டிருந்த நிலையில், போலீசார் அதிரடியாக அவரை தேடி உள்ளே சென்றனர்.

ஆனால் அஸ்ரம் பாபுவுக்கு தற்போது உடல்நிலை சரியில்லை என்றும் அவர் தப்பி ஓட முயற்சிக்கவில்லை என்றும் அவர் குணம்டைந்ததும் போலீசிடம் விசாரணைக்கு வருவார் என்றும் அவரது மகன் கூறியுள்ளார். அதே நேரத்தில் இந்த புகாரில் குற்றம்சாட்டப்பட்ட அஸ்ரம் பாபுவின் உதவியாளர் போலீசில் சரணடைந்திருக்கிறார்.
அஸ்ராம் பாபு கைது செய்யப்பட்டவுடன், சாலை மார்க்கமாக ஜோத்பூர் கொண்டுவரப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications