பெண்ணை அடித்து உதைத்து பலாத்காரம்: போலீஸார் கைது
நொய்டா: டெல்லி அருகே உள்ள நொய்டா நகரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அடித்து உதைத்து கற்பழித்த 2 போலீஸார் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார் ஒரு பெண். அவரை ஒரு கும்பல் கற்பழித்து அவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டு, பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்று விட்டது.

இதுகுறித்து அப்பெண் போலீஸில் புகார் கொடுத்தார். அதில், நான் குடியிருந்த அதே குடியிருப்பில் வசித்து வந்த ஒரு நபர் போலீஸ் வேலையில் சேருவதற்கு தயாராகி வந்தார். அவர் தனது நண்பர்களுடன் வீட்டிற்குள் வந்து என்னை பலாத்காரம் செய்தார் என்று கூறியிருந்தார்.
போலீஸார் விசாரணை நடத்தி 2 போலீஸ்காரர்கள் உள்பட 4 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கற்பழிப்பில் ஈடுபட்டது ஊர்ஜிதமானதால் நான்கு பேரையும் கைது செய்தனர்.
மேலும் ரகசியக் கண்காணிப்பு கேமராவில் இவர்கள் பணத்தைப் பறிமுதல் செய்து சென்றதும் பதிவாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications