ஒதுக்கீடு செய்த நிதியை வழங்காத மத்திய அரசு: தெற்கு ரயில்வே மேலாளர் குற்றச்சாட்டு!
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை இன்னமும் மத்திய அரசு முழுமையாக வழங்கவில்லை என்று தெற்கு ரயில்வே மேலாளர் ராகேஷ் மிஸ்ரா குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெற்கு ரயில்வேக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட 1,100 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்கவில்லை. இதில் வெறும் 550 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியிருக்கிறது.
இதனால் புதிய வழித்தடம் அமைத்தல், அகலப்பாதைகளாக மாற்றுதல் உள்ளிட்டவை முடிக்கப்பட முடியவில்லை என்றார்.
மேலும் சென்னை - கடலூர் இடையே புதிதாக ரயில்பாதை அமைக்க வலியுறுத்தி ராகேஷ் மிஸ்ராவிடம் பொதுமக்கள் இயக்கங்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications