ஹைதராபாத், புனே குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதை ஒப்புக் கொண்ட யாசின் பட்கல்

பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல் கடந்த 28ம் தேதி இந்திய-நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டான். அவனை தேசிய புலனாய்வு துறையினர் தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் யாசின் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்ததாவது,
சைபராபாத் அருகே உள்ள தில்சுக்நகரில் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்த ஒருவரிடம் யாசின் வெடி பொருட்களை அளித்துள்ளான். சைபராபாத்தை தாக்கினால் அங்கு வியாபாரம் செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வராது என்பதால் அங்கு தாக்குதல் நடத்துமாறு பாகிஸ்தானில் இருந்து உத்தரவு வந்ததன்பேரில் யாசின் குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்தினான் என்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி தில்சுக் நகரில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 17 பேர் பலியாகினர் மற்றும் சுமார் 100 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் தேதி புனேவில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடித்ததில் 4 வெளிநாட்டவர்கள் உள்பட 17 பேர் பலியாகினர். இது குறித்து யாசின் விசாரணையாளர்களிடம் கூறுகையில், மக்கள் அதிகம் வரும் கடையாக பார்த்து குண்டு வைத்ததாகவும், பெரும் சேதம் ஏற்பட வேண்டும் என்பதற்காக கேஸ் சிலிண்டர் அருகே குண்டு வைத்ததாகவும் தெரிவித்துள்ளான்.
மேலும் தனது உறவினர்களான இக்பால் மற்றும் ரியாஸ் பட்கல் குறித்து தகவல் அளித்த யாசின் அவர்கள் இந்தியா வரவில்லை என்றான். இக்பால் இந்த ஆண்டின் துவக்கத்தில் நேபாள் சென்றதாகவும், செயற்கைக்கோள் போன் மூலம் பாகிஸ்தானில் உள்ள தனது தலைவர்களிடம் பேசியதாகவும் யாசின் தெரிவித்தான்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications