மதகுருமார்கள் பெண்களிடம் இருந்து தள்ளியே இருக்க வேண்டும்: பாபா ராம்தேவ் அறிவுரை
Subscribe to Oneindia Tamil

மதகுருவான அசாரம் பாபு மீது மைனர் சிறுமி பாலியல் புகார் கூறியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மதகுருமார்களுக்கு யோகா குரு பாபா ராம்தேவ் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
இந்து சாஸ்திரப்படி மதகுருமார்கள் பெண்களிடம் இருந்து தள்ளியே இருக்க வேண்டும். தனது தாய், மகள், மாமியார் உள்பட எந்த பெண்ணுடனும் தனியாக இருப்பதை தவிர்க்க வேண்டும். கௌரவமாக நடந்துகொள்ளாத யாரும் பிரச்சனைகளை சந்திக்கத் தான் வேண்டும். சிலர் புகார்களை தற்போது சந்தித்துள்ளார்கள். இந்து சாஸ்திரப்படி நடக்காவிட்டால் மேலும் சிலர் இனிமேல் புகரார்களை சந்திக்கலாம் என்றார்.
அசாரம் பாபுவின் மகன் தனது தந்தையை காப்பாற்ற அந்த சிறுமிக்கு மனநிலை சரியில்லை என்று குற்றம்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications