சிரியா மீதான போருக்கு ரஷ்யா எதிர்ப்பு: தங்கம் விலை குறைய வாய்ப்பு
சென்னை: சிரியா மீதான அமெரிக்காவின் தாக்குதல் அறிவிப்பை ரஷ்யா கடுமையாக எதிர்ப்பதால், உள்நாட்டில் தங்கத்தின் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் மேற்காசியாவில் நிலவும் அசாதாரண நெருக்கடி சற்றே குறையும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
இன்று இரவு பிராந்திய பொருளாதார நிலை குறித்து அமெரிக்காவின் நிதித் துறை அறிக்கை வெளியிடவிருக்கிறது. அதில் இந்த மாதம் அமெரிக்கப் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த 85 பில்லியன் டாலர் திட்டம் என்னவென்பதையும் தெரிவிக்கும் என எதிர்ப்பார்க்கிறார்கள்.

ரூபாய் மதிப்பு
சிரியப் போர் மட்டுமல்ல, ரூபாயின் மதிப்பு சற்றே உயர்ந்தாலும் தங்கத்தின் விலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் சூழல் உள்ளது.
இப்போது தங்கத்துக்கு உள்ளூர் மார்க்கெட்டில் நல்ல விலை கிடைப்பதால், கையிலிருக்கும் தங்கத்தை விற்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள் மக்கள். இதனால் உள்ளூரில் தங்கம் சற்று அதிகமாகவே கிடைக்கிறது. இதனால் தங்க இறக்குமதியை ஓரளவு குறைக்கக் கூடும். அப்படிக் குறைந்தால் ரூபாய் மதிப்பு உயர வாய்ப்புள்ளது.
ரூபாய் மதிப்பில் ஏற்படும் சிறு உயர்வு கூட பெட்ரோல், தங்கம் போன்றவற்றின் இறக்குமதி மதிப்பைக் குறைக்க உதவும். ஆக இவை அனைத்துமே சிரியா மீதான அமெரிக்கத் தாக்குதலைப் பொறுத்துள்ளது.
மார்க்கெட்டில் தங்க வர்த்தகம்
இன்றைய நிலவரப்படி ஆசிய தங்க வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1393.69 டாலருக்கு விற்பனையானது. கோல்ட் ப்யூச்சர் டிசம்பரில் 1393.40 ஆக முதிர்வடைகிறது. உள்ளூர் சந்தையில் 10 கிராம் ஆபரணத் தங்கம் ரூ 31940 ஆகவும், சுத்தத் தங்கம் ரூ 32100 ஆகவும் உள்ளது. பண்டச் சந்தையில் தங்கப் பத்திரங்கள் ரூ 35000 வரை விலை போகின்றன.
கச்சா விலை நிலவரம்...
சிரியப் போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விலையும் சற்று குறையும் வாய்ப்புள்ளது. வரும் அக்டோபரில் ப்ரென்ட் க்ரூட் ஒப்பந்த விலை 114.99 டாலராகவும், வெஸ்ட் டெக்ஸாஸ் இன்டர்மீடியேட் 107.45 டாலராகக் குறையவும் வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications