மகளுடன் நிச்சயம்… மாமியாருடன் வாலிபர் ஓட்டம்: சென்னையில் புதுப்பெண் அதிர்ச்சி
சென்னை: சென்னையில் மகளுக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளையுடன் தாய் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கரணை சத்தியா நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி வசந்தா (35). இருவரும் கொத்தனார் வேலை பார்த்து வந்தனர். இவர்களது மகளுக்கும், திண்டிவனத்தை சேர்ந்த பார்த்தசாரதி என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்தனர்.
நிச்சயம் முடிந்ததை அடுத்து வருங்கால மனைவியை பார்ப்பதற்காக பார்த்தசாரதி அடிக்கடி மாமியார் வீட்டிற்கு வந்தார். அப்போது மாமியார் வசந்தாவுடன் பார்த்தசாரதி சகஜமாக பேசி பழகினார்.
நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறவே மாமியாருடன் உறவை வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக வசந்தா திடீரென மாயமானார். இது குறித்து சேகர் பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நிச்சயம் செய்திருந்த மாப்பிள்ளை பார்த்தசாரதியுடன் வசந்தா ஓட்டம் பிடித்திருப்பது தெரியவந்தது. இது பற்றி தெரிந்த உடன் புதுப்பெண் அதிர்ச்சியில் உள்ளார்.
வருங்கால மருமகனுடன் மாமியார் ஓடிப்போன சம்பவம் பள்ளிக்கரணை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.