பசியால் அழுத குழந்தை... மொபைட் ஓட்டியவாறு ‘தாய்ப்பால்’ கொடுத்த சீனப்பெண்

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: சீனாவில் ஒரு பெண் மொபெட்டில் பயணித்தபடி தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து போலீஸில் மாட்டியுள்ளார்.

தாய்ப்பாலிற்கும், தாய்ப்பாசத்திற்கு நிகரானது உலகில் வேறொன்றுமில்லை. ஆனால், அதற்கும் இடம் பொருள் உண்டு என்பதை உணர்த்தியுள்ளது சீனாவில் நடந்த சம்பவம் ஒன்று.

சீனப்பெண் ஒருவர் மொபெட் ஓட்டியவாறே, பசியால் அழுத தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். அதனைக் கண்ட போலீசார், அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்தி அறிவுரை கூறியுள்ளனர்.

தாய்ப்பாசம்...

தாய்ப்பாசம்...

சீனாவின் யூஷூ என்ற நகரில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள தெருக்கள் வழியாக மொபெட்டில் பயணித்த இப்பெண் போகும்போதே ஓடும் வண்டியில் வைத்தே தனது குழந்தைக்குப் பால் கொடுத்தபடி போயுள்ளார்.

18 மாதக் குழந்தை....

18 மாதக் குழந்தை....

இதைப் பார்த்த போலீஸ்காரர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். அக்குழந்தைக்கு 18 மாத வயதாகிறது. தனது இடுப்பில் குழந்தையை வைத்துக் கொண்டு மொபெட் ஓட்டியபடி பால் கொடுத்துள்ளார் அப்பெண்.

வண்டியை ஓட்டிய படியே....

வண்டியை ஓட்டிய படியே....

ஒரு கையை ஹேண்டில் பாரில் வைத்தபடி இன்னொரு கையால் குழந்தையை அணைத்துக் கொண்டு பால் கொடுத்தபடி போனார் அப்பெண் என்று அப்பெண்ணை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

எச்சரிக்கை....

எச்சரிக்கை....

மறுபடியும் இதேபோல செய்தால் வாகனத்தைப் பறிமுதல் செய்து விடுவோம் என போலீஸார் அவருக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

செல்போன் பேசறத விட....

செல்போன் பேசறத விட....

போலீஸார் அப்பெண்ணை தடுத்து நிறுத்தியபோது அப்பெண் போலீஸாரிடம், செல்போனில் பேசியபடி வாகனத்தை ஓட்டுவதை விட இது பெரிய ஆபத்தைக் கொண்டு வந்து விடாது என்று வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+