ஓட்டு...ஓட்டு.. ஓட்டு...ரூ7860 கோடியில் வருது ஏழை மக்களுக்கு இலவச செல்போன், ஐபேட் !!
டெல்லி: ஏழை மக்களின் வாக்குகளை கைப்பற்ற நாடு முழுவதும் கிராமப்புற ஏழை மக்களுக்கு ரூ.7860 கோடி செலவில் 2.5 கோடி செல்போன், 90 லட்சம் ஐபேடு ஆகியவற்றை இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாக்குகளை கைப்பற்றும் வகையில் ‘உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி எல்.பி.ஜி சிலிண்டர்களுக்கான மானியத்தை வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இதுவும் வாக்குகளை குறிவைத்தே அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது அடுத்த அஸ்திரமாக செல்போன், லேப்டாப், ஐபேட் ஆகியவைகளை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. கூடவே 30 நிமிடம் டாக் டைம், 30 எஸ்எம்எஸ், 30 எம்பி இணையம் ப்ரீ என்றும் அறிவிக்க உள்ளது.

ரூ. 7860 கோடி செலவில்
ரூ.7860 கோடி செலவில் நாடுமுழுவதும் உள்ள கிராமப்புற ஏழை மக்களுக்கு 2.5 கோடி செல்போன், 90 லட்சம் டேப்ளட் எனப்படும் ஐபேடு ஆகியவற்றை வழங்க திட்டமிட்டுள்ளது. 2014-15ம் ஆண்டில் தொடங்கி அடுத்த 4 ஆண்டுகளுக்கு இதனை வழங்க ஆலோசித்து வருகிறது.

இலவச இணைப்பு
இந்த திட்டத்தின் படி இலவச மொபைல் போன்கள் அனைத்தும் கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை மக்களுக்கு மட்டும் வழங்கப்படும் மொபைல் போன்களுக்கு 2 ஆண்டுகளுக்கு இலவச இணைப்பும் வழங்கப்படும். பயனாளிகள் ஒருமுறை ரூ.300 செலுத்தினால், 30 நிமிடம் டாக் டைம், 30 எஸ்எம்எஸ், 30 எம்பி இணையம் ப்ரீ என்கிற அதிரடி அறிவிப்பும் வெளியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலவச இணைப்பு
இந்த திட்டத்தின் படி இலவச மொபைல் போன்கள் அனைத்தும் கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை மக்களுக்கு மட்டும் வழங்கப்படும் மொபைல் போன்களுக்கு 2 ஆண்டுகளுக்கு இலவச இணைப்பும் வழங்கப்படும். பயனாளிகள் ஒருமுறை ரூ.300 செலுத்தினால், 30 நிமிடம் டாக் டைம், 30 எஸ்எம்எஸ், 30 எம்பி இணையம் ப்ரீ என்கிற அதிரடி அறிவிப்பும் வெளியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பி.எஸ்.என்.எல் நிறுவனம்
மத்திய அரசு சார்பில் இந்த செல்போன் மற்றும் ஐபேடு வினியோகப்பணிகளை பிஎஸ்என்எல் செய்யும் எனக் கூறப்படுகிறது. முதல் கட்டமாக ரூ.395 கோடியில் 25 லட்சம் செல்போன்களும், ரூ.772.5 கோடியில் 15 ஐபேடுகளும் வழங்கப்படும். படிப்படியாக 4 ஆண்டுகளில் இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.

மாணவர்களுக்கு ஐபேடு
அதே நேரத்தில் ஐபேடுகளை கிராமம் மற்றும் நகர்ப்புற 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட வரைவை தொலைத்தொடர்பு ஆணையம் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதும் இது அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று பணிகள் விரைந்து தொடங்கும் என தெரிகிறது.

இலவச டாக்டைம்
மாணவர்கள் தங்களது ஐபேடுகளுக்கு 2 ஆண்டுகளுக்கு 75 நிமிடம் டாக்டைம், 75 எஸ்எம்எஸ், 500 எம்பி டேட்டாக்களை இலவசமாக பெற்றுக் கொள்ளவும் வசதி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாக்குகளை குறிவைத்து காங்கிரஸ் எறியும் இலவச அஸ்திரம் சாதகமாக அமையுமா? என்பது லோக்சபா தேர்தலில் தெரியவரும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications