சொத்துக் குவிப்பு- ஆந்திர டிஜிபி மீது சிபிஐ விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: ஆந்திர மாநில போலீஸ் டிஜிபி தினேஷ்குமார் ரெட்டி, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருக்கிறது.
ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக இருக்கும் தினேஷ்குமார் ரெட்டியும் அவரது குடும்பத்தினரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஆந்திராவைச் சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான உமேஷ்குமார் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சவுகான், போப்டே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டி.ஜி.பி. திணேஷ்குமார் ரெட்டி மீதான சொத்து குவிப்பு புகார் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த விசாரணை தொடர்பான அறிக்கையை 4 மாதத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications