இன்று மழை பெய்யும்!
சென்னை: தமிழகத்தின் மத்திய மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வாநிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மண்டல இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆந்திர கடற்கரை அருகே மேற்கு மத்திய வங்கக்கடலின் மேல் அடுக்கில் காற்றின் சுழற்சி உருவாக உள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடியமழை பெய்யும்.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும்.
சில இடங்களில் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்."
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 8-30மணியுடன் முடிவடைந்த 24 மணிநேர மழை அளவு:
செந்துறை, தஞ்சாவூர், பரமக்குடி தலா 8 செ.மீ.
மதுரை தெற்கு 7 செ.மீ., அரியலூர், லால்குடி, திருக்கோவிலூர், ஏற்காடு, திருத்துறைப்பூண்டி தலா 6 செ.மீ.
சேலம், பரமத்தி வேலூர், தம்மம்பட்டி, சமயபுரம், அருப்புக்கோட்டை, சிதம்பரம் தலா 5 செ.மீ.
தர்மபுரி, வேதாரண்யம், ஆடுதுறை, பெரம்பலூர், கிராண்ட் அணைக்கட்டு, திருக்காட்டுப்பள்ளி தலா 4 செ.மீ.
நாமக்கல், திருச்சி விமானநிலையம், சங்கராபுரம், விளாத்திக்குளம், தேவலா, குன்னூர், புள்ளம்பாடி, தருமபுரி, சேத்தியாதோப்பு, பாடலூர், செஞ்சி, கடவூர், ஓமலூர் தலா 3 செ.மீ., கெட்டி, சாத்தனூர், அன்னூர், கோவிலங்குளம், சங்ககிரி, திருவிடைமருதூர், காட்டுமன்னார்கோவில், தக்களை, குமாரப்பாளையம், மானாமதுரை, தொழுதூர், மாமல்லபுரம், கிருஷ்ணகிரி, பாலக்கோடு, வாழப்பாடி, திருப்பத்தூர், நடுவட்டம் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.
கோபிச்செட்டிப்பாளையம், ராசிபுரம், கும்பகோணம், விராலி மலை உள்பட பல இடங்களில் தலா 1 செ.மீ.மழை பதிவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications