ராஜஸ்தானில் 16 வயது சிறுமியை கற்பழித்து வீடியோ எடுத்து மிரட்டிய 3 வாலிபர்கள்
ஜெய்பூர்: ராஜஸ்தானில் 16 வயது சிறுமியை 3 பேர் சேர்ந்து கற்பழித்து அதை வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை ஒரு கம்பெனியில் வேலை பார்க்கும் அவரது தாயார் அழைப்பதாகக் கூறி அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 3 வாலிபர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். சிறுமியை நிவாரு தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர்கள் 3 பேரும் அவரை கற்பழித்து அதை வீடியோ எடுத்தனர்.
இதையடுத்து அந்த வீடியோவை வைத்து மிரட்டியே சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்து வந்துள்ளனர். மேலும் தாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் வீடியோவை இன்டர்நெட்டில் போட்டுவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதையடுத்து சிறுமி நடந்தவற்றை தனது தாயிடம் தெரிவித்தார்.
அவர் உடனே இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் அந்த 3 வாலிபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தலைமறைவாக உள்ள அந்த 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.