மண்ணெண்ணெய் மானியம், ஓய்வூதிய பயன்களை பெற ஆதார் கட்டாயம்: மத்திய அரசு
அடல் ஓய்வூதிய திட்டப் பயன்கள் மற்றும் மண்ணெண்ணெய்க்கான அரசின் மானியத்தை பெறுவதற்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டெல்லி: மண்ணெண்ணெய் மானியம் பெறவும் தற்போது, ஆதார் எண் கட்டாயம் என அறிவித்துள்ளது. இதே போல வயதானவர்களுக்கு ஓய்வூதியத் தொகை வழங்கும் 'அடல்' ஓய்வூதியத்திட்டத்தில் பயன்பெறவும் ஆதார் எண் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் சமையலுக்குப் பயன்படும் சிலிண்டர் பெற, ரேஷன் கார்டு மற்றும் பான்கார்டு விண்ணப்பிக்க, புதிய வாகனங்கள் பதிவு செய்ய, புதிய வங்கிக்கணக்கு தொடங்க, செல்போன் இணைப்புக்கு அப்ளை செய்ய, டிரைவிங் லைசென்ஸ் வாங்க, விவசாயிகள் மானிய விலையில் உரங்கள் பெற என அரசின் பலத் திட்டங்களுக்கு ஆதார் அட்டையில் உள்ள எண் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் மண்ணெண்ணெய் மானியம் பெறவும் தற்போது, ஆதார் எண் கட்டாயம் என அறிவித்துள்ளது, மத்திய அரசு. இத்திட்டத்தில் மக்கள் அனைவரும் பயன்பெற வசதியாக வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என அறிவித்துள்ளது.
வயதானவர்களுக்கு ஓய்வூதியத் தொகை வழங்கும் ' அடல்' ஓய்வூதியத்திட்டத்தில் பயன்பெறவும்; வருகிற ஜூன்15க்குள் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் எனவும் மைய அரசு ஆணையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மண்ணெண்ணெய் மானியம் மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் பயனாளிகளுக்கு முறையாக சென்று சேர வேண்டும் என்பதற்காக ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறும்போது,மண்ணெண்ணெய் மானியம் அல்லது அடல் ஓய்வூதிய திட்டத்தை பெற வேண்டுமெனில் ஆதார் அடையாள அட்டை எண்ணை சமர்பிக்க வேண்டும்.
எனவே ஆதார் அடையாள அட்டை இல்லாவர்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் மண்ணெண்ணெய் மானியம் பெற முடியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேசமயம் ஆதார் அடையாள அட்டை வரும்வரை, ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, விவசாய வங்கி கணக்கு புத்தகம், நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, வட்டாட்சியர் அல்லது அரசு உயரதிகாரியிடம் பெற்ற அடையாள சான்றிழ்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து மேற்கண்ட பயன்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications