Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சித்தப்பாவுக்காக.. அரியலூரில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மகன்.. வசமாக சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு துணை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது சித்தப்பாவிற்கு பதிலாக ஆங்கில தேர்வு எழுதியபோது வசமாக சிக்கினார். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு துணை தேர்வுகள் நடந்து வருகின்றன. அதன்படி இன்று அறிவியல் பாட தேர்வுகள் நடந்து முடிந்தது. நாளை சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதன்மூலம் நாளையுடன் 10ம் வகுப்பு துணை தேர்வுகள் முடிவுக்கு வருகின்றன.

a-son-arrested-after-writing-the-10th-standard-english-exam-for-his-uncle-in-ariyalur

முன்னதாக கடந்த 4ம் தேதி மொழிப்பாட தேர்வும், 5ம் தேதி விருப்ப மொழி பாட தேர்வும், 7ம் தேதி ஆங்கில தேர்வு, 8ம் தேதி கணித தேர்வும் நடந்து முடிந்தது. இந்த தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடந்தது.

இந்த தேர்வை 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் எழுதி வருகின்றனர். அந்த வகையில் அரிலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் எனும் கிராமத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான துணைதேர்வு நடந்து வருகிறது.
கடந்த 7 ம் தேதி ஆங்கில தேர்வு நட்நதது. அப்போது மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் காப்பியடிப்பதை தடுக்கும் வகையில் சிறப்பு ஆய்வு படையினர் அந்த பள்ளிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது தேர்வு எழுதிய ஒருவரின் முகமும், அவர் வைத்திருந்த ஹால் டிக்கெட்டில் இடம்பெற்றிருந்த போட்டோவும் வித்தியாசமாக இருந்தது. இதையடுத்து சந்கேத்தின் பேரில் அவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது.

அதாவது ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் ஆங்கில தேர்வை எழுத வேண்டிய நபரின் பெயர் முகமது அலி. ஆனால் தேர்வு எழுதிய நபரின் பெயர் முகமது அஸ்லாம் என்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி முகமது அஸ்லாமுக்கு, முகமது அலி சித்தப்பா முறையாகும். முகமது அஸ்லாமின் தந்தையும், முகமது அலியும் அண்ணன் - தம்பியாகும்.

தனது சித்தப்பா முகமது அலி 10ம் வகுப்பு ஆங்கில தேர்வில் தேர்ச்சியடையவில்லை. இதனால் அவரை பாஸ் ஆக்கும் வகையில் அண்ணன் மகனான முகமது அஸ்லாம் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி சிக்கியது தெரியவந்தது. இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரைதொடர்ந்து முகமது அஸ்லாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வுருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+