சித்தப்பாவுக்காக.. அரியலூரில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மகன்.. வசமாக சிக்கியது எப்படி?
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு துணை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது சித்தப்பாவிற்கு பதிலாக ஆங்கில தேர்வு எழுதியபோது வசமாக சிக்கினார். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு துணை தேர்வுகள் நடந்து வருகின்றன. அதன்படி இன்று அறிவியல் பாட தேர்வுகள் நடந்து முடிந்தது. நாளை சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதன்மூலம் நாளையுடன் 10ம் வகுப்பு துணை தேர்வுகள் முடிவுக்கு வருகின்றன.

முன்னதாக கடந்த 4ம் தேதி மொழிப்பாட தேர்வும், 5ம் தேதி விருப்ப மொழி பாட தேர்வும், 7ம் தேதி ஆங்கில தேர்வு, 8ம் தேதி கணித தேர்வும் நடந்து முடிந்தது. இந்த தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடந்தது.
இந்த தேர்வை 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் எழுதி வருகின்றனர். அந்த வகையில் அரிலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் எனும் கிராமத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான துணைதேர்வு நடந்து வருகிறது.
கடந்த 7 ம் தேதி ஆங்கில தேர்வு நட்நதது. அப்போது மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் காப்பியடிப்பதை தடுக்கும் வகையில் சிறப்பு ஆய்வு படையினர் அந்த பள்ளிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தேர்வு எழுதிய ஒருவரின் முகமும், அவர் வைத்திருந்த ஹால் டிக்கெட்டில் இடம்பெற்றிருந்த போட்டோவும் வித்தியாசமாக இருந்தது. இதையடுத்து சந்கேத்தின் பேரில் அவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது.
அதாவது ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் ஆங்கில தேர்வை எழுத வேண்டிய நபரின் பெயர் முகமது அலி. ஆனால் தேர்வு எழுதிய நபரின் பெயர் முகமது அஸ்லாம் என்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி முகமது அஸ்லாமுக்கு, முகமது அலி சித்தப்பா முறையாகும். முகமது அஸ்லாமின் தந்தையும், முகமது அலியும் அண்ணன் - தம்பியாகும்.
தனது சித்தப்பா முகமது அலி 10ம் வகுப்பு ஆங்கில தேர்வில் தேர்ச்சியடையவில்லை. இதனால் அவரை பாஸ் ஆக்கும் வகையில் அண்ணன் மகனான முகமது அஸ்லாம் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி சிக்கியது தெரியவந்தது. இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரைதொடர்ந்து முகமது அஸ்லாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வுருகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications