திரும்ப திரும்ப பெரியாரையே வம்பிக்கிழுக்கும் எச். ராஜா.. ஏன் இப்படி.. எதற்காக இந்த வம்படி??
தந்தை பெரியார் குறித்து எச்.ராஜா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
Recommended Video

அரியலூர்: தந்தை பெரியாரை எச்.ராஜா விடுவதாக இல்லை... திரும்பவும் வம்பிழுக்கு இழுத்து விட்டுள்ளார்!
எப்பவுமே எதையாவது பேசி சர்ச்சையில் சிக்குவர் எச்.ராஜா. கொஞ்ச நாள் சத்தமே இல்லாமல் இருந்தவர் திரும்பவும் ஒரு பகீர் கருத்தை சொல்லி இருக்கிறார். தந்தை பெரியாரை தேச துரோகி' என்றும், அவரது சிலையை அகற்ற வேண்டும் என்றும் சொன்ன ராஜா, இப்போது, 'பெரியார், மணியம்மை குறித்த பாடங்களை பாடப்புத்தகங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறி உள்ளார்.
அரியலூரில் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு எச்.ராஜா நேற்று சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

ராஜா சவால்
பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்கட்சிகள் யாராவது ஒருவரை பிரதமர் வேட்பாளர்களாக காட்ட முடியுமா? நான் சவால் விடறேன். மோடிதான் பலசாலி.. மக்கள் ஆதரவு உள்ள ஒரே தலைவர்.. சோனியாவும், ராகுல் காந்தியும் ஹரால்டு ஊழல் வழக்கில் ஜாமீனில் உள்ள குற்றவாளிகள். அவர்களுக்கு போதுமான வளர்ச்சி கிடையாது. எதிர்கட்சிகளால் ஒன்றும் செய்ய முடியாது. இவர்கள் பூஜியம் தான்.

உதவாத துறை
அதேபோல, இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலம், 22 ஆயிரத்து 600 வணிக வளாகம் உள்ளிட்டவைகள் மீட்கப்பட வேண்டும். இதனை பாதுகாக்க தவறிவிட்ட அறநிலைத்துறை வெளியேற வேண்டும். தமிழ்நாட்டிலேயே ஒன்றுக்கும் உதவாமல், தண்டத்திற்கு இருக்கும் ஒரே துறை இந்து அறநிலைத்துறைதான்.

ஏன் தடுக்கவில்லை
ஈ.வே.ரா, மணியம்மை பற்றி பாடத்திட்டத்தை பற்றி படித்த குழந்தைகள் ஒழுக்கமாக இருக்குமா? இந்த பாடத்திட்டதை புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும். பெரியார்-மணியம்மை குறித்த பாடங்களை படிக்கும் குழந்தைகள் எப்படி ஒழுக்கமாக வளரும். ஒரு வயதானவர் ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்வதை ஏன் தடுக்கவில்லை என்று குழந்தை கேட்டால் அதற்கு என்ன பதில் உள்ளது?

கண்டனங்கள்
எனவே பெரியார் குறித்த பாடங்களை புத்தகங்களில் இருந்து நீக்கினாலே எல்லாமே சரியாகிவிடும்" இவ்வாறு எச்.ராஜா கூறினார். திரும்பவும் பெரியாரை பற்றி எச்.ராஜா கூறிய இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications