பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவு இல்லை.. தமிழக தேர்தல் அதிகாரி திட்டவட்டம்
சென்னை: அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவு இல்லை என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் வாக்குப்பதிவின் போது இரு சமூகத்தினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள், பைக்குகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கலவரத்தில் ஈடுபட்ட பலரை கைது செய்தனர்.
இந்த நிலையில் பாப்பிரெட்டிபட்டியில் உள்ள வாக்குசாவடிகளை பாமகவினர் கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டனர் என்றும் திமுக கூட்டணி கட்சிகள் புகார் வைத்து இருந்தது. 5க்கும் மேற்பட்ட வாக்குசாவடிகளை பாமகவினர் கைப்பற்றி முறைகேடு செய்தனர் என்றும் திமுக சார்பாக புகார் அளிக்கப்பட்டது.

83 சதவீதம்
இதனால் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 83 சதவீதம் வாக்குப் பதிவு நடந்துள்ளது.

மறுவாக்குப் பதிவு
இது கள்ளஓட்டு போட்டது, வாக்குச் சாவடிகளை கைப்பற்றியதால் இருக்கலாம். எனவே பொன்பரப்பியில் மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைத்தார்.

கலவரம்
இதையடுத்து கலவரம் நடந்த இடங்களில் உள்ள தேர்தல் அதிகாரிகள் தன்னிடம் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ உத்தரவிட்டிருந்தார். அதன்படி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இதுகுறித்து சத்யபிரதசாஹூ கூறுகையில் பொன்பரப்பியில் தேர்தல் நேரத்தில் கலவரம் நடக்கவில்லை.

மறுதேர்தல்
மாவட்ட ஆட்சியர் அறிக்கையின்படி பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவுக்கு அவசியம் இல்லை. எனவே பொன் பரப்பியில் மறுவாக்குப் பதிவு இல்லை. மீதமுள்ள வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்துவது குறித்து ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications