கர்நாடகாவில் மேலும்12 பேருக்கு கொரோனா தொற்று- மொத்தம் 163 பேருக்கு பாதிப்பு
பெங்களூரு: கர்நாடகாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 163 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. கடந்த 12 மணிநேரத்தில் மொத்தம் 490 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் இதுவரை 109 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் 4067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பாஜகவின் ஸ்தாபன நாளை முன்னிட்டு அக்கட்சி தொண்டர்களிடையே பேசிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிராக நீண்ட யுத்தம் நடத்தப்பட வேண்டியிருக்கிறது என்றார்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 291 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்நிலையில் கர்நாடகாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 163 ஆக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications