5 வயது சிறுமி கடத்தி பலாத்காரம்.. பீகாரை சேர்ந்தவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. போலீஸ் அதிரடி
பெங்களூர்: கர்நாடகாவில் 5 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 35 வயது நிரம்பிய பீகாரை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு அவர் தப்பிக்க முயன்றபோது துப்பாக்கியால் என்கவுண்டர் செய்ததில் குண்டு பாய்ந்து அவர் இறந்தார்.
கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி தனது 5 வயது மகளுடன் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் தங்கி உள்ளார். சிறுமியின் தாய் ஹவுஸ் ஹெல்பராக வேலை செய்து வருகிறார். சிறுமியின் தந்தை பெயிண்டராக இருக்கிறார்.

இந்நிலையில் சிறுமியை அழைத்து கொண்டு அவரது தாய் வீட்டு ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார். சிறுமி வீட்டருகே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று சிறுமி மாயமானார். சிறுமியை அவரது தாய் தேடிப்பார்த்தார்.
அப்போது வீட்டு முன்பக்கத்தில் உள்ள கழிவறையில் சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தாள். உடனடியாக சிறுமி மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சிறுமியை ஒருவர் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து அவர் யார்? என்பது பற்றி விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் என்பது அவரது பெயர் நிதிஷ் குமார் (வயது 35) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையை எடுத்தனர்.
நிதிஷ் குமார் இருக்கும் இடத்தை போலீசார் நெருங்கினர். போலீசாரை பார்த்த அவர் தாக்கிவிட்டு ஓடினார். போலீசார் சரணடையும்படி கூறினர். ஆனால் அவர் கேட்காமல் ஓடினார். விரட்டி பிடிக்க முயன்ற போலீசாரையும் தாக்கினார். இதனால் போலீசார் தற்காப்புக்காக நிதிஷ் குமாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் உடலில் குண்டு பாய்ந்து அவர் பரிதாபமாக இறந்தார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications