Accenture Layoff : 1 அல்ல.. 2 அல்ல.. 7 மாத சம்பளம் கொடுக்கும் அக்சென்சர்.. ஊழியர்கள் ஷாக்!
பெங்களுரூ: உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான அக்சென்சர் தனது ஊழியர்களில் 5 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. தானாக முன்வந்து ராஜினாமா செய்பவர்களுக்கு 7 மாத ஊதியம் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
உலகின் முன்னணி ஐடி நிறுவனம் அக்சென்சர் . அந்த நிறுவனத்தில் உலகம் முழுவதும் 5 லட்சம் ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இந்தியாவில் மட்டும் 2 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். அக்சென்சர் நிறுவனம் இந்தாண்டு தனது செலவுகளை குறைக்க திட்டமிட்டுள்ளது.

10000 ஊழியர்கள் நீக்கம்
இதற்காக அனைத்து மட்டத்திலும் உள்ள அதன் ஊழியர்களில் 5 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்தது. அதில் 5 சதவீதம் என்றால் குறைந்தபட்சம் 10,000 ஊழியர்கள் இந்தியாவில் மட்டும் பணிநீக்கம் செய்யப்பட உள்ளார்கள்.

3 மாத சம்பளம்
இந்நிலையில் வழக்கமாக பணிநீக்கம் செய்யும் போது, 1, 2 அல்லது அதிகப்படியாக 3 மாதம், இல்லையெனில் நிறுவனத்தில் அந்த ஊழியர் பணியாற்றிய வருடத்திற்கு இணையான மாத சம்பளத்தை Severance Payout ஆக ஐடி நிறுவனங்கள் வழங்கும்.

ஏழு மாத சம்பளம்
ஆனால் தற்போது அக்சென்சர் நிறுவனம் 7 மாத Severance Payout வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் இது தானாக முன்வந்து பணியை ராஜினாமா செய்து வெளியேறும் ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அக்சென்சர் அறிவித்துள்ளது.. இந்த 7 மாத Severance Payout வழங்கப்படுவதில், 3 மாத நோட்டீஸ் பீரியடுக்கு பதிலான சம்பளம், கூடுதலாக 4 மாத சம்பளம் நிறுவனத்தை விட்டு வெளியேறுவோருக்கும் வழங்கப்பட உள்ளது.

யாரெல்லாம் நீக்கம்
இந்த பணி நீக்கம் குறித்து அக்சென்சர் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்: "இந்த ஆண்டு, எங்கள் வணிகத்தின் அனைத்து மட்டத்திலும் சுமார் 5% பேரை பணி நீக்கம் செய்யப்போகிறோம் சிறப்பாக செயல்படாத, குறைவான திறன் உடையவர்களை அடையாளம் காண்போம், அந்த நபர்கள் மட்டுமே நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பணிதான் என்றார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications