மதம் மாறாவிட்டால் ‛ரேப் கேஸ்’ கொடுப்பேன்! மனைவி தெஹ்ரீன் மீது காதல் கணவர் விஷால் பரபர குற்றச்சாட்டு
பெங்களூர்: காதலித்து திருமணம் செய்த பிறகு கட்டாயமாக மதம் மாற வேண்டும். இல்லாவிட்டால் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகாரளித்து சிறையில் அடைப்பதாக காதல் மனைவி தெஹ்ரீன் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து மிரட்டுவதாக விஷால் என்பவர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதனால் பயந்துபோய் இஸ்லாமுக்கு மதம் மாறியதாக கூறியுள்ளார். இந்த விஷயத்தில் தெஹ்ரீன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க இந்து அமைப்பினர் வலியுறுத்தி வருவது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் கதக் மாவட்டத்தை சேர்ந்தவர் விஷால் கோகாவி. இவரது மனைவி பெயர் தெஹ்சின் ஹொசமணி. இவர்கள் 2 பேரும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. விஷால் கோகாவி இந்து மதத்தை சேர்ந்தவர். தெஹ்சின் ஹொசமணி இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்.

மதத்தை கடந்து இருவரும் காதலித்தனர். 3 ஆண்டு உறவில் இருந்த அவர்கள் கடந்த 2024 நவம்பர் 26ம் தேதி சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தங்களின் திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்.
அதன்பிறகு 2025 ஏப்ரல் மாதம் 25ம் தேதி விஷால் கோகாவி - தெஹ்சின் ஹொசமணி ஆகியோர் இடையே 2வது முறையாக திருமணம் நடந்தது. அப்போது இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தான் விஷால் கோகாவி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தன்னை கட்டாயப்படுத்தி இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாற்றியதாகவும், மதம் மாறாவிட்டால் பலாத்கார புகார் அளிப்பதாக தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மிரட்டி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுபற்றி விஷால் கோகாவி கூறியுள்ளதாவது: நான் இஸ்லாமிய பெண்ணை காதலித்தேன். 3 ஆண்டு உறவில் இருந்தேன். எனது காதலின் குடும்பத்துக்கு எங்களின் காதல் விவகாரம் தெரியவந்தது. அப்போது, ‛‛என்னை திருமணம் செய்து கொண்டால் எப்போதும் உன்னுடன் இருப்பேன். இல்லாவிட்டால் ரயில் முன்பு பாய்ந்தோ, விஷம் குடித்தோ தற்கொலை செய்து கொள்வேன்'' என்று கூறினார்.
இதையடுத்து சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டோம். எங்களின் திருமணத்தை பதிவும் செய்தோம். அதன்பிறகு அவரது உறவினர் இப்ராஹிம் சாப் தவால் கான் மற்றும் அவரது அம்மா பேகம் பானு ஆகியோர் என்னிடம் மதம் மாற கூறினர். அதோடு ஜமாத்துக்கு செல்ல கூறினர். என் மனைவியிடம் இதை என்னிடம் கூறினார். அதேபோல் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று என் மனைவி கூறினார். நான் மறுத்தேன். இதனால் பிரச்சனையானது. ஜமாத்தை சேர்ந்தவர்கள் மொத்தமாக கூடி எனக்கு அழுத்தம் கொடுத்தேன். ஜமாத்துக்கு வர வேண்டும். அங்குள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனர்.
அதுமட்டுமின்றி இஸ்லாமிற்கு மாறவில்லை என்றால் பலாத்கார புகார் அளித்து அந்த வழக்கில் கைது செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டினார். இதனால் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. இறுதியாக தொடர் அழுத்தத்தால் என்னை மதம் மாற்றினர். நமாஸ் செய்கிறேனே என்று என்னை கண்காணித்தனர். நமாஸ் செய்யும்போது போட்டோ எடுத்து எனது மனைவிக்கு அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன். போட்டோ அனுப்பாவிட்டால் நமாஸ் செய்தேனா.. இல்லையா என்று என்னிடம் கேள்வி கேட்பார்'' என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போது கர்நாடகாவில் பூதாகரமாகி உள்ளது. பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி விஷால் கோகாவின் மனைவி தெஹ்ரீன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலிறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக கதக் போலீஸ் சூப்பிரண்டு ரோஹன் ஜெகதீஷ் கூறுகையில், ‛‛இதுதொடர்பாக முறைப்படி புகார் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த விவகாரம் ஆன்லைனில் பேசும்பொருளாகி உள்ளது.
நேற்றைய தினம் சமூக வலைதளங்களில் இருவருக்கும் நடந்த திருமணம் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அந்த இளைஞரின் பெயர் விஷால். அவர் இந்து. இளம்பெண் பெயர் தெஹ்சீன். அவர் இஸ்லாமியர். முதற்கட்ட விசாரணையில் இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்துள்ளேன். கதக் சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்துள்ளனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக அவர்கள் முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்துள்ளனர். இதுதான் தற்போது பரவி வருகிறது.
இந்த வழக்கில் மத மாற்றம் சார்ந்த அம்சம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் மே 23ம் தேதி அந்த விஷால் பெட்டகேரி காவல் நிலையத்துக்கு அழைத்து பிரச்சனை உள்ளதா? என்று கேட்கப்பட்டது. அப்போது எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தார். அதனை வீடியோ பதிவு செய்துள்ளோம். அதில் அவர் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை'' என்றார்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications