பெங்களூரையே ஸ்தம்பிக்க வைத்த பிங்க் சேலை பெண்கள்!
இளஞ்சிவப்பு நிற சேலை உடையணிந்து, 10,000 க்கும் மேற்பட்ட 'அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHAs), இன்று பெங்களூர் நகரின் மையப் பகுதியையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டனர்.
சிட்டி ரயில் நிலையத்திலிருந்து சுதந்திர பூங்காவிற்கு அவர்கள் அணிவகுத்துச் சென்றபோது, அது மகளிரா அல்லது கடல் அலையா என்ற சந்தேகம் காண்போருக்கு வந்துவிட்டது. சுமார் 2 கி.மீ தூரமுள்ள இந்த பகுதி முழுக்க ஸ்தம்பித்தது.

நிலையான மாதாந்திர கவுரவத் தொகையாக தங்களுக்கு தலா ரூ .12,000 வழங்கப்பட வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கையாக இருந்தது.
தங்களுக்கு வழங்கப்படும் ஊதியமான ரூ .3500, கடந்த 15 மாதங்களாக வழங்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் சுகாதார அமைச்சர் பி.ஸ்ரீராமுலுவை சந்தித்து, இதுபற்றி பேசியும் பலனில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

AIUTUC இன் மாநிலக் குழு உறுப்பினர் ரமா இதுபற்றி கூறுகையில், "கர்நாடகாவில் 41,000 'ஆஷா' தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் 20% பேர் மட்டுமே தொடர்ந்து சம்பளத்தைப் பெறுகிறார்கள், மீதமுள்ளவர்கள் எதுவும் இல்லாமல் வேலை பார்க்கிறார்கள். இருந்தபோதிலும், அவர்கள் வேலையை தொடரத்தான் செய்கிறார்கள். அவர்கள் எவ்வளவு காலம் காத்திருக்க முடியும். அவர்களின் சம்பளத்தை அரசு உடனடியாக கொடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். " என்றார்.
மொத்தத்தில் இந்த பிங்க் பெண்கள் போராட்டம் மொத்த பெங்களூரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications